கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மார்ச் 8 சனிக்கிழமை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் M.S.சண்முகம் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் C. சக்திவேல் மற்றும் நிர்வாக இயக்குனர் R.அசோக்குமார் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர்M. விஷ்ணு பிரியா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மகளிர் தின வாழ்த்து கூறினர்.விழாவில் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றோர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு விழா இனிதே முடிவடைந்தது.